PHOTOS

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : அரசு கொடுத்த வீட்டில் வசிப்பவர்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாமா?

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அரசால் அளிக்கப்பட்ட வீட்டில் இருப்பவர்கள் சேர முடியுமா? 

Advertisement
1/9

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்திற்கு பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளுக்குட்பட்டு வருபவர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

2/9

உதாரணமாக, ஏழை, எளிய குடும்பத்தினர் மாதம் ரேஷன் கடைகளில் அரிசி வாங்குபவர்கள் கட்டாயம் இந்த திட்டத்தில் பயனாளியாக தகுதியுடையவர்கள். ஆனால், குடும்பத்தின் ஆண்டு வரும் 2.5 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது.

3/9

குடும்ப உறுப்பினர்களின் மொத்த ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் நிச்சயம் இந்த திட்டத்தில் சேர முடியாது. இதுதவிர, 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்த திட்டத்தில் பயனாளியாக சேர முடியாது.

4/9

வார்டு உறுப்பினரைத் தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் இருக்கும், ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி, நகர்மன்ற தலைவர், மேயர் உள்ளிட்டோரின் குடும்பத்தினர் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளியாக சேர தகுதியற்றவர்கள்

 

5/9

அரசு ஊழியர்கள் குடும்பத்தினர், ஓய்வூதியதாரர்கள் எல்லாம் இந்த திட்டத்தில் சேர முடியாது. வருமானவரி, தொழில்வரி செலுத்துபவர்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தில் பயனாளியாக முடியாது. 

6/9

ஆனால், ஒரு குடும்பம் அரசால் வழங்கப்பட்ட வீட்டில் வசிக்கிறது என்றால், அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விதிமுறைகளுக்குள் வருகிறார்கள் என்றால் நிச்சயம் இந்த திட்டத்தில் சேரலாம். அவர்களுக்கு எந்த தடையும் கிடையாது.

7/9

கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் சரியான வங்கி கணக்கு எண், தொலைபேசி எண் சரியாக கொடுத்திருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும். இல்லையென்றால் உங்கள் பணம் வேறொருவர் வங்கி கணக்குக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

8/9

ஜூன் 4 முதல் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இது ஒரு அரிய வாய்ப்பு. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் ஜூன் 4 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருக்கிறது.

9/9

அதனால், சரியான ஆவணங்களுடன் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும்.





Read More