மகா சிவராத்திரி நன்னாளில், பிரபஞ்சத்தின் அனைத்துமாகி நிற்கும், சிவபெருமானை வணங்குவதால், வாழ்க்கையின் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, இன்பமும் செல்வமும் நிலைத்திருக்கும். மாதம்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் வரும் மகா சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பிரம்மாவும் விஷ்ணுவும், சிவபெருமானின் அடிமுடி எங்கே உள்ளது என்று தேடிச் சென்றபோது, அவர்களுக்கு அக்னி பழம்பாய், விஸ்வரூப தரிசனம் கொடுத்த நாள் சிவராத்திரி என்று புராணங்கள் கூறுகின்றன. அதோடு, சிவபெருமானுக்கும், அன்னை பாவதிக்கும் திருமணம் நடந்த தினம் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
மகா சிவராத்திரி அன்று, விரதம் இருந்து ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை, உச்சரித்தாலே போதும், எம பயம் நீங்கி, நோய்களிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம். சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து பூஜிப்பது, வாழ்க்கையில் செல்வங்கள் அனைத்தையும் அடைய உதவும்.
ராசிக்கு ஏற்ற ருத்ராட்ச வகைகள்
சிவபக்தர்கள் பயபக்தியுடன் இணைந்திருக்கும் சின்னம் ருத்ராட்சம். சிவபெருமானின் முக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் தான் ருத்ராட்சம் என்று கூறப்படுகிறது. ருத்ராட்சத்தை பற்றி புராணங்களில் பல இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராசிக்கு ஏற்ற வகையில் ருத்ராட்சம் அணிவது சிறந்த பலன் கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மேஷ ராசி
மேஷத்திற்கு அதிபதி செவ்வாய் கிரகம். இதனால் மூன்று முக ருத்ராட்சம் அணிவது அதிர்ஷ்டம் செல்வ வளத்தையும் தரும்.
ரிஷப ராசி
ரிஷபத்திற்கு அதிபதி சுக்கிரன் என்பதால், ஆறுமுக ருத்ராட்சம் அணிவது, நிம்மதியான வாழ்வையும் செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்கு அதிபதி புதன் என்பதால், நான்கு முக ருத்ராட்சம் அணிவதன் மூலம், புதன் கிரகம் வலுவாகி, வாழ்க்கையில் வெற்றிகள் வந்து சேரும்.
கடக ராசி
கடகத்திற்கு சந்திரன் அதிபதி. எனவே சந்திரனின் நிலை வலுப்பெற்று, செல்வ வளம் குறையாமல் இருக்க இரண்டு முக ருத்ராட்சம் அணிவது சிறப்பு.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன் என்பதால், சூரியன் நிலை வலுவாக 12 முக ருத்ராட்சம் அணிவது பலன் தரும். இதனால் மன உறுதி, எடுத்த காரியங்களில் வெற்றி ஆகியவற்றைப் பெறலாம்.
கன்னி ராசி
கன்னி ராசிக்கு அதிபதி புதன் என்பதால், நான்கு முக ருத்ராட்சம் அணிவதன் மூலம் புதன் கிரகம் வலுவாகி, வாழ்க்கையில் செல்வமும் வளமும் குறையாமல் இருக்கும்.
மேலும் படிக்க | மகா சிவராத்திரி 2025... இன்னல்கள் அனைத்தும் விலக ராசிக்கு ஏற்ற எளிய பரிகாரங்கள்
துலாம் ராசி
துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், சுக்கிரன் நிலை வலுப்பெற, ஆறுமுக ருத்ராட்சம் அணிவது நல்ல பலனை கொடுக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய் என்பதால், செவ்வாய் நிலை வலுப்பெற, இணைத்த காரியம் அனைத்தும் நிறைவேற, மூன்று முக ருத்ராட்சம் அணிவது பலன் தரும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான் என்பதால், குருவின் நிலை வலுப்பெற, பஞ்சமுக ருத்ராட்சம் அணிவது வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தையும் அடையலாம்.
மகர ராசி
மகர ராசிக்கு அதிபதி சனி பகவான் என்பதால் ஏழு முக ருத்திராட்சம் அணிவது, சனி பகவானின் அருளை பரிபூரணமாக பெற உதவும். வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது இருக்காது.
கும்ப ராசி
கும்ப ராசிக்கும் அதிபதி சனிபகவான். எனவே, ஏழு முக ருத்ராட்சத்தை அணிவதால், சனீஸ்வரனின் அருளை பரிபூரணமாக பெற்று, பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம்.
மீன ராசி
மீன ராசிக்கு அதிபதி குரு பகவான் என்பதால், குருவின் நிலை வலுவாக பஞ்சமுக ருத்ராட்சத்தை அணிய வேண்டும். இதனால் நோய் நொடியற்ற நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ